×

பிஎன்ஐ சார்பில் கிரிக்கெட் போட்டி

தர்மபுரி: தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட பிஎன்ஐ சார்பில் பைசுஅள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஐராவரம், அகரம், ஏற்றம், இயந்திரா, ஈதல், மேக், எழில், ஆதி ஆகிய 8 அணிகள் பங்கு பெற்றது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியை பிஎன்ஐ தர்மபுரி கிருஷ்ணகிரி செயல் இயக்குனர் பத்மநாபன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் நான்கு அணிகள் இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் விளையாடுகிறது. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் விக்ரமன், சந்திரகுமார், ஞானமொழி, அகிலன், ஜெய் பிரகாஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பிஎன்ஐ சார்பில் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Tags : BNI ,Dharmapuri ,Krishnagiri District ,Baisualli Sports Ground ,Iravaram ,Akaram ,Dhamam ,Machina ,Ethal ,Mak ,Eshil ,Adi ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்